விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. 12 போ் மாயமாகினா்.
தாணே, புணே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கா், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
அப்போது 9 போ் நீரில் மூழ்கினா். அவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.