முகப்பு
இந்தியா

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

Updated On : 7 செப்டம்பர், 2025 at 7:12 AM
மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலம்.
பகிர்:

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் அறுந்து தொங்கிய மின்சார கம்பி மீது சிலை ஒன்று உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை சில உள்ளூர்வாசிகள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் நகராட்சியால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

ஆனால் அதில் பினு சுகுமாரன் குமரன் (36) பலியாகிவிட்டதாக செவன் ஹில்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிவித்ததாக நகராட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதேசமயம் பாரமௌண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபான்ஷு காமத் (20), துஷார் குப்தா (20), தர்மராஜ் குப்தா (49), கரண் கனோஜியா (14) மற்றும் அனுஷ் குப்தா (6) ஆகிய ஐந்து பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A man died and five other persons were injured after coming in contact with a live electric wire during a Ganesh idol immersion procession in Mumbai on Sunday morning, civic officials said.

முழு கட்டுரையைப் படிக்க →