கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப். 24) சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவராக அறியப்படும், பீமண்ணா (எ) சுக்லால் முட்டய்யா குல்மெதே (வயது 58) மற்றும் அவரது மனைவி விமலக்கா சாத்மேக் (56) ஆகியோரும் சரணடைந்துள்ளனர். இவர்கள், இருவரையும் பிடிக்க காவல் துறையினர் தலா ரூ.16 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.

முன்னதாக, கட்சிரோலி மாவட்டத்தில் மட்டும் 716 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில், இன்று மட்டும் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

In Maharashtra, 6 Naxals, who were wanted with a combined reward of Rs 62 lakh, have surrendered to security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பா் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி

தீபாவளி: தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு

களைகட்டிய நவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்

நெஞ்சை சூறையாடும்... ரிதிகா!

SCROLL FOR NEXT