ஆன்லைன் சூதாட்டம் 
இந்தியா

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட செயலியை ரத்து செய்தாலும், புதிது புதிதாக முளைக்கும் செயலியை இயக்குவதும், மக்கள் அதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான பணத்தை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று மாநிலங்களைச் சேர்ந்த எட்டு ஆப்ரேட்டர்களை தெலங்கானா சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா சிஐடி குழுக்கள் முதலில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாபில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு ஆப்ரேட்டர்களைக் கைது செய்ததாகக் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிஐடி) சாரு சின்ஹா ​அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமிருந்து பல்வேறு ஹார்ட்வேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

The Telangana CID on Wednesday said it has apprehended eight operators from three states for conducting online betting through apps, where people allegedly lost huge money.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!

லவ் யூ... சைத்ரா!

பச்சைத் தீ... மாளவிகா மோகனன்!

அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

SCROLL FOR NEXT