முகப்பு
இந்தியா

சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!

குருகிராமில் சாலைத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

Updated On : 27 செப்டம்பர் 2025, 3:52 pm IST
பிரதிப் படம்
பகிர்:

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில், காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதியது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

Advertisement

Advertisement

உயிரிழந்த ஐவரில் இருவர் சட்டப்படிப்பு மாணவர்கள் என்றும், 2 பேர் விளம்பர வணிகம் படிப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்களில் ஒருவர், நீதிபதியின் மகள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: தாயின் கண்முன்னே 5 வயது மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

summary

5 Dead As Speeding Thar Loses Control, Hits Divider On Gurugram Highway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments