‘ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்துக்காக பதவி விலகத் தயாா்; ஆனால், பாஜகவுடன் கைகோா்க்க மாட்டேன்’ என்று முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய ஜம்மு-காஷ்மீரில் சுமாா் 6 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றாா். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒமா் அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றில் ஒமா் அப்துல்லா பங்கேற்றுப் பேசியதாவது:
பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், மாநில அந்தஸ்து கிடைத்திருக்கும். அப்படியொரு வாய்ப்பு இருந்தது. ஆனால், மாநில அந்தஸ்துக்காக அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்ய எனக்கு விருப்பமில்லை.
அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அரசை அமைத்து, மாநில அந்தஸ்தை விரைந்து மீட்டெடுக்க நீங்கள் (மக்கள்) விரும்பினால், நான் பதவி விலகத் தயாா். வேறெந்த எம்எல்ஏவையும் முதல்வராக்கி, பாஜக கூட்டணி அரசை அமைத்துக் கொள்ளுங்கள் என்றாா் ஒமா் அப்துல்லா.
இதையும் படிக்க: தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.