கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
ஏராளமான துறைகள் குறித்துப் பேசுவதால், கற்றுக்கொள்வதற்கு சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி என பாஜக மாநில தலைவர் கருத்து...
கற்றுகொள்ளவதற்கு சிறந்த தளமாக மனதின் குரல் நிகழ்ச்சி உள்ளது என பாஜக மாநில தலைவர் வீரேந்தர் சச்தேவ் இன்று (ஏப். 26) தெரிவித்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியிருந்தார். இதோடு மட்டுமின்றி நாட்டின் வெண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி வளர்ச்சி, வடகிழக்கு மாநிலங்களின் மூங்கில் பொருள்கள் தயாரிப்பு குறித்தும் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தில்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்தேவ் பேசியதாவது:
Advertisement
Advertisement
''2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். அதில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்றும், அது எத்தனை எளிமையானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதோடுமட்டுமின்றி மிகப்பெரிய ஜனநாயகத்தில் சேகரிக்கப்படும் தரவுகள், டிஜிட்டல் முறையில் மிகவும் பாதுகாப்பாக எவ்வாறு பேணி பாதுகாக்கப்படும் எனவும் பிரதமர் பேசியிருந்தார். இது மிகுந்த பயனுள்ள தகவல்கள். இதுபோன்று பல துறைகள் குறித்தும் பேசுகிறார்.
அதனால், கற்றுக்கொள்வதற்கு மனதின் குரல் நிகழ்ச்சி விட சிறந்த தளம் வேறு எதுவும் இல்லை'' என சச்தேவ் குறிப்பிட்டார்.
No better platform for learning than Mann Ki Baat Delhi BJP President Virender Sachdev
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.