வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
புது தில்லி : வெய்யிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி வழியாகக் கேட்டுக்கொண்டார்.
‘மன் கி பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சி மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளில் (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வாயிலாக வானொலியில் மக்களுடன் பேசிய பிரதமர் மோடி : “நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. ஆகவே, கூடுதல் கவனத்துடன் இருத்தல் முக்கியம்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பகலில் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
Advertisement
Advertisement
தண்ணீரைத் தொடர்ந்து பருகுங்கள். இவ்விவகாரத்தில் பல்வேறு அரசுத் துறைகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளை மறந்துவிடாதீர்கள்” என்றார்.
PM Modi In his monthly radio broadcast Mann Ki Baat urges people to take precautions amid scorching heat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.