முகப்பு
இந்தியா

வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

வெய்யிலில் கைக்குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்மணி | குருகிராம் - PTI
பகிர்:

புது தில்லி : வெய்யிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சி வழியாகக் கேட்டுக்கொண்டார்.

‘மன் கி பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சி மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளில் (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வாயிலாக வானொலியில் மக்களுடன் பேசிய பிரதமர் மோடி : “நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. ஆகவே, கூடுதல் கவனத்துடன் இருத்தல் முக்கியம்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பகலில் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

Advertisement

Advertisement

தண்ணீரைத் தொடர்ந்து பருகுங்கள். இவ்விவகாரத்தில் பல்வேறு அரசுத் துறைகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

summary

PM Modi In his monthly radio broadcast Mann Ki Baat urges people to take precautions amid scorching heat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.