முகப்பு
இந்தியா

பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவும் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கென்று எந்த திட்டங்களும் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:26 PM
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பகிர்:

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கென்று எந்த திட்டங்களும் இல்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். சுமார் 1.23 மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்திய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளத்தில், மோடி அரசிடம் புதிய யோசனைகள் தீர்ந்துவிட்டன.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் குறித்து பதில்களைவிட அதிக கேள்விகளையே பட்ஜெட் எழுப்புகிறது. ஏழை மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எந்தத் தீர்வும் கூறவில்லை.

மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

Congress President and Leader of Opposition in the Rajya Sabha Mallikarjun Kharge on Sunday criticised the proposals, alleging that they fail to address key economic challenges facing the country, offer no relief to vulnerable sections of society, and no solution to unemployment among the youth.

முழு கட்டுரையைப் படிக்க →