நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் போராட்டம் பற்றி...
நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அமளிக்கு மத்தியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையை நிகழ்த்தினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மேற்காசிய போர் விவகாரத்தில் இந்திய தலைமை அமைதி காப்பதாகவும், உறுதியான பிரதமர் தேவை என்றும் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.