பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கப்பட்டது. இன்று(பிப். 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) ரூ. 1,104.98 கோடி ஒதுக்கப்பட்டது.
சிபிஐ பயிற்சி மையங்களை நவீனமயமாக்கல், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்களை அமைத்தல், சிபிஐக்கென தனி கட்டடங்கள் உள்பட மத்திய புலனாய்வுப் பிரிவுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதலை முன்னிலைப்படுத்தி சிபிஐக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சிபிஐக்கு ரூ. 1,058.3 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 4.4 சதவீதம் கூடுதலாக சிபிஐக்கு இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.