முகப்பு
இந்தியா

கேரளத்தில் மூத்த தம்பதி படுகொலை; 3 வயது பேரன் படுகாயம்!

கேரளத்தில் மூத்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது 3 வயது பேரன் படுகாயமடைந்துள்ளார்.

Updated On : 19 ஜனவரி, 2026 at 4:31 AM
படுகொலை
பகிர்:

பாலக்காடு: கேரள மாநிலம் ஒட்டப்பாலம் பகுதியில், வயதான மூத்த தம்பதி குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது 3 வயது பேரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், மூத்த தம்பதியின் மருமகனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டவர்கள், நசீர் (78), சுஹாரா (70) என்பதும், ஒட்டப்பாலம் பகுதியில் தோட்டகராவில் வாழ்ந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களது பேரன் முகமது இஷான் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொலையை செய்தது பொன்னனியைச் சேர்ந்த முகமது ரஃபி என்பதும், இவர் தம்பதியின் மருமகன், குழந்தையின் தந்தை என்பதும் தெரிய வந்துள்ளது.

தம்பதியின் மகள் சுல்ஃபி, கணவர் ரஃபியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில மாதங்களாக பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு, நசீர் வீட்டுக்கு வந்த ரஃபி, தம்பதியைக் குத்திவிட்டுக் குழந்தையையும் குத்தியிருக்கிறார். உடனடியாக குழந்தையை சுல்ஃபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, வயதான தம்பதி இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

குழந்தைக்கு மிக ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலைமை சீராக உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலையாளியை தேடி வருகிறார்கள்.

summary

An elderly couple was allegedly stabbed to death and their three-year-old grandson seriously injured by their son-in-law at Ottapalam here, police said on Monday.

முழு கட்டுரையைப் படிக்க →