அசாதுதீன் ஓவைசி கோப்புப் படம்
இந்தியா

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள 16 இந்தியர்களை அரசு மீட்க வேண்டும்: ஒவைசி

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ஒவைசி கோரிக்கை

இணையதளச் செய்திப் பிரிவு

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஒவைசி கூறியிருப்பதாவது "ஹைதராபாதை சேர்ந்த மூவர் உள்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை தருவதாக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் வேலை எனக்கூறி, மியான்மர் - தாய்லாந்து எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் 18 முதல் 20 மணிநேரம் வேலைசெய்ய நிர்படுத்தப்படுவதுடன், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். மேலும் பாஸ்போர்ட், தொலைபேசி, மருத்துவ வசதிகளை இழந்துள்ளனர்.

மியான்மர் - தாய்லாந்து எல்லையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கப்படுவதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

16 Indians enslaved’ at Myanmar–Thailand border: Owaisi urges External Minister Jaishankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறை முதல் ரெட்ட தலை வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

"உதயநிதி மீது FIR போடணும்! திமுக ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா?": அண்ணாமலை பேட்டி | BJP | DMK

2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..

"இந்த அக்கறை ADMK ஆட்சியில் ஏன் இல்லை?": முதல்வர் ஸ்டாலின் | செய்திகள்: சில வரிகளில் | 22.01.26

இதயத்தில் துளையுடன் பிறக்கும் குழந்தைகள்! ஏன்? பிறவி இதய நோய் காரணங்களும் அறிகுறிகளும்...

SCROLL FOR NEXT