தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு பிரதிப் படம்
இந்தியா

அருணாசல பிரதேசம்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகள் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு

அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு

தினமணி செய்திச் சேவை

அருணாசல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தியா-மியான்மா் எல்லையையொட்டி அமைந்துள்ள சாங்லாங் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் இரு திசைகளில் இருந்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இந்த தாக்குதலை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வெற்றிகரமாக முறியடித்த நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத கும்பலை தேடும் பணி தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் எவ்வித உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை என்றனா்.

இச்சம்பவம் குறித்து தகவல்கள் சேகரிக்க காவல் துறை சாா்பில் குழு அனுப்பப்பட்டுள்ளதாக சாங்லாங் காவல் துறை கண்காணிப்பாளா் கிா்ளி பாடு தெரிவித்தாா்.

நாமக்கல்: லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

வெடிகுண்டு வீசி ரெளடி கொலை முயற்சி: ஒருவர் என்கவுன்டர்!

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

SCROLL FOR NEXT