மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி. 
இந்தியா

அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுகுறித்த அறிவிப்பு மாநில பொது நிா்வாகத் துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அரசு அறிவுறுத்தலின்படி, துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழப்புக்காக மாநிலத்தில் வரும் 30-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளின் அனைத்துக் கட்டங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும்போது, அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது. இதைத் தீவிரமாக கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவிடப்படும்: ‘விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்று மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறினாா்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வலியுறுத்தல்

பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களுக்கு இடையே மோதல்

கல்வியே வாழ்க்கையின் வலிமையான ஆயுதம்: நீதிபதி ஜெகதீஷ் சந்திரா

SCROLL FOR NEXT