முகப்பு
இந்தியா

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

அஜீத் பவார் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்...

Updated On : 28 ஜனவரி, 2026 at 8:23 AM
ராகுல் - அஜீத் பவார்
பகிர்:

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற விமானம் புணே மாவட்டத்தின் பாராமதியில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.

இந்த நிலையில், அஜீத் பவாரின் மறைவுக்கு காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மற்றும் சக பயணிகள் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் மகாராஷ்டிர மக்களுடன் நான் துணை நிற்கிறேன்.

இந்த துக்க நேரத்தில் அஜீத் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

summary

Lok Sabha Leader of the Opposition Rahul Gandhi has expressed his condolences on the death of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar, who died in a plane crash.

முழு கட்டுரையைப் படிக்க →