மக்கள் தலைவர் அஜீத் பவார்! பிரதமர் மோடி இரங்கல்
அஜீத் பவார் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்...
விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற தனி விமானம் புணே மாவட்டத்தின் பாராமதியில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அஜீத் பவாருடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
அஜீத் பவார் மக்களுடன் வலுவான பிணைப்பையும், அடித்தட்டு மக்களுடன் ஆழமான தொடர்பையும் கொண்டிருந்த மக்கள் தலைவர்.
மகாராஷ்டிர மக்களுக்குச் சேவையாற்ற எப்போதும் முன்களத்தில் இருந்த ஒரு கடின உழைப்பாளி என்ற வகையில் அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
நிர்வாக ரீதியில் அவரது ஆழ்ந்த அறிவும், ஏழை மற்றும் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கான அவரது ஆர்வமும் குறிப்பிடத்தக்கது.
அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
People's leader Ajit Pawar! Prime Minister Modi expresses condolences.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.