அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!
அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்து...
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்களை காவல் துறை அதிகாரிகள் தரையிறக்கி சிறைப்பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் சென்ற தனி விமானம் புதன்கிழமை (ஜன. 28) விபத்துக்குள்ளானதில் அவர் உள்பட 5 பேர் பலியாகினர். இதையடுத்து, புணேவில் உள்ள பாரமதியில் அஜீத் பவாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அனுமதியின்றி சுமார் 4 ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மூலம் அந்த மர்ம ட்ரோன்களை தரையிறக்கிய காவல் துறையினர் அவற்றை சிறைப்பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் சுமார் 2 லட்சம் மக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது மறைவால் மகாராஷ்டிரத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
police officers have grounded and seized drones that were flying without permission at the funeral of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.