ரோகித் பவார் - அஜீத் பவார் 
இந்தியா

அஜீத் பவாரின் மரணம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: ரோகித் பவார்

அஜீத் பவாரின் மரணம் குறித்து ரோகித் பவார் கூறுவது..

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பான சூழ்நிலைகள் அனைவருக்கும் சந்தேகங்கள் இருப்பதாக என்சிபி (எஸ்பி) ரோஹித் பவார் தெரிவித்தார்.

பாராமுட்டியில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர், என்சிபி பிரிவுகள் ஒன்றுபட வேண்டும் என்று அஜீத் பவார் விரும்பியதாகவும், இணைப்புக்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் விமான விபத்தில் துணை முதல்வர் அஜீத் பவார் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் 12 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 125 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல்கள் இன்று நடைபெற்றன.

ஜனவரி 28 அன்று விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது விமான விபத்துக்குள்ளானதில் அஜீத் பவார் உள்பட நால்வர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அனைவரின் மனதிலும் கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன.

விபத்து ஏன் நடந்தது? அது எப்படி நடந்திருக்கும் என்பது போன்ற சந்தேகங்கள் குறித்து பிப்ரவரி 10-ஆம் தேதி மும்பையில் ஒரு விளக்கக்காட்சியாக வழங்கப் போகிறேன் என மறைந்த என்சிபி தலைவரின் மருமகனான ரோகித் பவார் கூறினார்.

அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

leader Rohit Pawar on Saturday said everyone has doubts about the circumstances surrounding Deputy Chief Minister Ajit Pawar's death in an air crash, and he would provide a detailed presentation about it on February 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் புரோமோ ஆரம்பம்! இயக்குநர் இவரா?

டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகும் 5 நட்சத்திர இளம் வீரர்கள்!

மேகாலயத்தில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுப்பு, பலி 27ஆக உயர்வு

NDAவுக்கு உண்மையான தலைமை தில்லிதான்! EPS விமர்சனத்திற்கு அருண்ராஜ் பதில்!

ராஜஸ்தான்: தற்காப்புக்காக சிறுத்தையை கோடரியால் தாக்கிக்கொன்ற விவசாயி

SCROLL FOR NEXT