இண்டிகோ - கோப்புப் படம் 
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குவைத்-தில்லி விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குவைத்-தில்லி விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.

குவைத்திலிருந்து தில்லிக்கு 180 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், விமானத்திற்குள் கையால் எழுதப்பட்ட துண்டு குறிப்பை பயணி ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்ததும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு விமானி தகவல் அளித்தார்.

தரையிறங்கியதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர். ஆனால் இதுவரை, சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் மீட்கப்படவில்லை. இறுதி அனுமதி கிடைத்த பிறகு விமானம் புறப்படும் என்று தெரிவித்தனர்.

An IndiGo flight operating from Kuwait to Delhi was diverted to the Ahmedabad airport on Friday morning after a bomb threat was reported on board, officials at the airport said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

ரூ.150 கோடி வசூலித்த சர்வம் மாயா..! ஓடிடியில் வெளியீடு!

SCROLL FOR NEXT