முகப்பு
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
இந்தியா

ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தியா

ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:38 PM
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
பகிர்:

ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

வெடிகுண்டுகள் உள்பட பல்வேறு வெடி பொருட்களுடன் ஓமன் கடற்பரப்பில் தலைநகர் மஸ்கட் அருகே சென்ற ஆளில்லா சிறிய ரக படகு ஒன்று மார்ஷல் தீவுகளின் எண்னெய் கப்பல் மீது மோதி பலத்த சேதத்தை விளைவித்ததில், அக்கப்பலில் பனியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் இது என்று சந்தேகிக்கப்படுகிறது.

கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

summary

An Indian crew member was killed after an oil tanker was struck by an unmanned drone boat off the coast of Oman

முழு கட்டுரையைப் படிக்க →