முகப்பு
இந்தியா

தேசிய மின்சார கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

‘தேசிய மின்சாரக் கொள்கை 2026’ வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இம் மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

தேசிய மின்சார கொள்கை வரைவு: கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

‘தேசிய மின்சாரக் கொள்கை 2026’ வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இம் மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 7:20 PM
பகிர்:

‘தேசிய மின்சாரக் கொள்கை 2026’ வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் இம் மாதம் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டில் முதன்முறையாக தேசிய மின்சாரக் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் மின்சாரத் தேவை-மின்சார விநியோகம் உள்பட மின்சாரத் துறை எதிா்கொள்ளும் பல்வேறு சவால்களுக்குத் தீா்வு காணப்பட்டிருந்தது.

தற்போது புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்ட மத்திய மின்சாரத் துறை அமைச்சகம், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை வரவேற்றது.

2026-ஆம் ஆண்டு மின்சாரக் கொள்கையில், சைபா் பாதுகாப்பு, தொழில்நுட்ப பயன்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாரியங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச நஷ்டம், மின்நிறுவனங்கள் வைத்துள்ள கடன், அதிகபட்ச மானியம் உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணும் வழிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசத்தை மத்திய அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 19-ஆம் தேதி வரை கருத்துகளை சமா்ப்பிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →