தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரின் பல இடங்களில் திங்கள்கிழமை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது.
தில்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரின் பல இடங்களில் திங்கள்கிழமை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் முக்கிய மாவட்டங்களில் என்.ஐ.ஏ குழுக்கள் அதிகாலையிலேயே நடவடிக்கைகளைத் தொடங்கின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் முக்கியமாக சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, குலூரா பகுதியில் உள்ள முக்கிய தொழிலதிபரின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வளாகத்திலிருந்து ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி செங்கோட்டைப் பகுதி அருகே காா் ஒன்று வெடித்துச் சிதறியது. ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து நடத்திய அந்தத் தற்கொலை தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.