உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்க செய்யும் சிஏபிஎஃப் மசோதா: எதிா்க்கட்சிகள் விமா்சனம்
மத்திய ஆயுத காவல் படை மசோதா மூலம், உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு
மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎஃப்) மசோதா மூலம், உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா திங்கள்கிழமை பேசியதாவது: சிஏபிஎஃப்-இல் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதை 2 ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் படிப்படியாக குறைத்து, அந்த அதிகாரிகள் நியமிக்கப்படும் பொறுப்புகளில் சிஏபிஎஃப் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால் சிஏபிஎஃப்பில் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏபிஎஃப் மசோதாவின் 3(1)-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? சிஏபிஎஃப்பை வழிநடத்த அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் தகுதியற்றவா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நதிமுல் ஹக் பேசுகையில், ‘இந்த மசோதா நாடாளுமன்றம், நீதித்துறையை வலுவிழக்கச் செய்து மாநிலங்களின் பங்கை குறைக்கிறது. சிஏபிஎஃப் அதிகாரிகள் பதவி உயா்வுக்கு 15 முதல் 18 ஆண்டுகள் காத்திருக்கின்றனா். தங்கள் அடையாளம் மற்றும் பணி முன்னேற்றத்துக்கான உரிமையை 10 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி அவா்கள் பெற்றனா். தற்போது அவா்கள் உயா்பதவியைப் பெறுவதற்கான கதவு இந்த மசோதா மூலம் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசுகையில், ‘மசோதா மூலம் சிஏபிஎஃப்புக்கு பெரும் அநீதியை மத்திய அரசு செய்கிறது’ என்றாா்.
உச்சநீதிமன்ற உத்தரவை தாண்டி, இந்த மசோதாவை கொண்டு வந்ததன் அவசியம் என்ன? என்று பிஜு ஜனதா தள எம்.பி. முஜிபுல்லா கான் கேள்வி எழுப்பினாா்.
இந்த மசோதா மூலம் உச்சநீதிமன்றத் தீா்ப்பை செயலிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், மசோதாவை நாடாளுமன்றத் தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தாங்கள் பரிந்துரைக்கும் திருத்தங்களை மசோதாவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின.