பிளாஸ்டிக் கவரில் இறந்த நிலையில் பெண் சிசு: போலீசார் விசாரணை.
ஸ்ரீபெரும்புதூர், டிச 24: சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சுங
ஸ்ரீபெரும்புதூர், டிச 24: சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் கவரில் கிடப்பதாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்க்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.