வாக்குச் சாவடியில் மோதல் - அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்
திண்டுக்கல், அக். 19: வாக்குச் சாவடியில் அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திண்டுக்கல் ஆறா
திண்டுக்கல், அக். 19: வாக்குச் சாவடியில் அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திண்டுக்கல் ஆறாவது வார்டுக்கான வாக்குச் சாவடி கோவிந்தாபுரம் மயானச சாலை நூற்றாண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. காலை வாக்குப் பதிவு தொடங்கி சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அதிமுக வாக்குச் சாவடி முகவர் செல்வம் என்பவருக்கும் திமுகவினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் அடிதடியில் முடிந்தது. இதனால் தான் தாக்கப்பட்டதாகக் கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செல்வம் சேர்ந்து கொண்டார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் செய்தனர்.
இது குறித்து அறிந்த இரு கட்சிகளைய் சேர்ந்த நிர்வாகிகள் வாக்குச் சாவடிக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக சில நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
Advertisement