கிருஷ்ணகிரியில் நிலமோசடி வழக்கில் 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை
கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக 12 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனது நிலத்தை போலி ஆவணங்களைக் காட்டி மோசடியாக விற்பனை செய்ததாக சுப்பிரமணி அளித்த புகாரில், சரவணன், சிவலிங்கம், மணி, ரத்தினம், ராஜலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிலப் பறிப்பு வழக்கில் புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.