முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: வருவாய் அலுவலர் உள்பட இருவர் கைது

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு, லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர்.

Updated On : 3 டிசம்பர், 2012 at 5:20 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:17 AM

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு, லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் மற்றும் அவரது உதவியாளரைக் கைது செய்தனர்.

விருதுநகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் புது வீடு கட்டி அதற்கான வரி தொடர்பாக வருவாய் அலுவலரை அணுகியபோது, வரியைச் சரி செய்து கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

குமரன் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் யோசனையின்படி, குமரன் லஞ்சம் கொடுத்தபோது, வருவாய் அலுவலர் யுவராஜ் (55), உதவியாளர் ரவி (48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.