முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் : பலர் கைது

கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டத்தில், கடலூரில் நகரச் செயலர் போஸ். ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டியில் நகரச் செயலர் நந்தகோபால் தலைமையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். காதாம்புளியூர் பகுதியில் முருகன் தலைமையில் 16 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். காட்டுக்கூடலூரில் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேப்போன்று பல்வேறு பகுதிகளில் இன்று பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →