சேலத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து
சேலத்தில் இரவு 1 மணியளவில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
தற்போதைய செய்திகள்சேலத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து
சேலத்தில் இரவு 1 மணியளவில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
சேலத்தில் இரவு 1 மணியளவில் தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, நள்ளிரவு 1 மணியளவில் ஓமலூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் பின்னால் இருந்த ஏசியில் தீப்பிடித்தது. இதனை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அனைத்துப் பயணிகளையும் பத்திரமாக இறக்கினார். இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் பேருந்து முழுவதும் தீக்கிரையானது.
எனினும், இந்த பேருந்தில் பயணம் செய்த 35 பேரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.