ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டை வைத்திருந்தவர் கைது
ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். 68 வயதான தர்வீஸ் முகைதீன் எ
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:08 PM
ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இருந்து ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பிடித்துச் சென்று வீட்டில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
68 வயதான தர்வீஸ் முகைதீன் என்பவர் மீனவர். இவர் தேவிபட்டினம் பெரியகடைத்தெருவைத் சேர்ந்தவர். இவரிடம் ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள கடல் அட்டைகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று அவற்றை கைப்பற்றி, முகைதீனை கைது செய்தனர். தற்போது மீன்பிடித் தடைக்காலமாததால் வருமானத்துக்காக இந்த கடல் அட்டைகளை பிடித்ததாக விசாரணையில் முகைதீன் தெரிவித்தார்.