பண்ருட்டியில் கோயில் உண்டியல் திருட்டு: மூன்று பேர் கைது
பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.
பண்ருட்டியில் உள்ள கோவில் ஒன்றின் உண்டியலைக் கொள்ளையடித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, பணத்தையும் மீட்டுள்ளனர்.
பண்ருட்டி வவுசி தெருவில் உள்ள விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் ஒன்று நகரின் மத்தியப் பகுதியில் உள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த 3 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ. 15 ஆயிரத்தை கொள்ளைடியத்துச் சென்றனர்.
இது குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து துரிதமாக விசாரணை நடத்தி கொள்ளையடித்த 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.