பட்டா மாறுதலுக்கு ரூ.1100 லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:04 AM
தேனி மாவட்டம் கொடுவிளார்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
தேனி கொடுவிளார்பட்டியைச் சேர்ந்த வி.ஏ.ஓ. முருகன், தன்னிடம் பட்டா மாற்றம் செய்ய ரூ. 1100 லஞ்சம் கேட்டதாக அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் முன்னிலையில் முருகன் ரூ.1100 லஞ்சம் பெற்றபோது போலீஸார் அவரை கைது செய்தனர்.
Advertisement