தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி
மகளிா் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கலாக இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பதிவு...
தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கு கொடுக்கும் மரியாதையாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.
Advertisement
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முழு நாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை எடுத்து வைக்கத் தயாராக உள்ளது.
நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கு அளிக்கும் மரியாதையாகும். இந்த உணர்வோடு, நாம் இத்திசையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.