கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்
பள்ளிக்கு தாமதமாக வந்ததைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார்.
பள்ளிக்கு தாமதமாக வந்ததைத் தட்டிக் கேட்ட ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார்.
விருதுநகரில் கே.வி.எஸ்.பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் அஜீத் குமார். இவர் நேற்றும் பள்ளிக்கு தாமதமாக வந்துள்ளார். இதற்கு தண்டனையாக கணித ஆசிரியர் பாண்டியராஜன், அந்த மாணவரை பள்ளியில் வெளியே நிற்க வைத்துள்ளார்.
இன்றும் அதேபோல் அஜீத் குமார் தாமதமாக பள்ளிக்கு வரவே, இன்றும் அவரை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்துள்ளார் ஆசிரியர் பாண்டியராஜன். இந்த நிலையில், கோபமடைந்த மாணவர் அஜீத் குமார், பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆசிரியர் கரும்பலகையில் பின்னால் திரும்பி எழுதிக் கொண்டிருந்தபோது, குத்திவிட்டு தப்பியோடினார்.
Advertisement
காயமடைந்த ஆசிரியர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.