சிவகாசி பட்டாசு நிறுவனங்களில் சோதனை
விருதுநகர், செப்.10: சிவகாசியில் பட்டாசு நிறுவனங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருது நகரைச் சுற்றி முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 தனிப்படைகளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
விருதுநகர், செப்.10: சிவகாசியில் பட்டாசு நிறுவனங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருது நகரைச் சுற்றி முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 தனிப்படைகளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அணில் பட்டாசு, ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலில் சோதனை மேற்கொண்டனர். இந்நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, பத்திரிகையாளர்களை உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சில இடங்களில் ஊடகத்தினருக்கும் போலீசாருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. சோதனை மர்மமான முறையில் நடப்பதாக ஊடகத்தினர் தங்களுக்குள் புகார் தெரிவித்துக் கொண்டனர்.