சிவகாசி விபத்து: மேலும் ஒருவர் சாவு
விருதுநகர், செப்.12: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு நிறுவன வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சிலர் மதுரை, சிவகாசி, ச
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:22 AM
விருதுநகர், செப்.12: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு நிறுவன வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சிலர் மதுரை, சிவகாசி, சாத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதை அடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.