முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லல் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கல்லல் குளத்தில்மூழ்கி சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து தேவகோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்லல் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலு

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

தேவகோட்டை காவல் உபகோட்டம் கல்லல் குளத்தில் மூழ்கி கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை போலீஸார் மீட்டனர்.

கல்லல் குளத்தில்மூழ்கி சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதை யடுத்து தேவகோட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்லல் காவல்நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர். இறந்த அந்நபருக்கு 35 வயது இருக்க லாம் என்றும் அவரது சட்டையின் காலர் உள்பகுதியில் சென்னை தையலகம் பெயர் இருப்பதாகவும், நபர் அடையாளம் தெரியவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டது. இதுகுறித்து கல்லல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →