முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டையில் பெண் கொலை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:03 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இவ் வளாகத்தில் புதிதாக ஒரு அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப் பகுதியில் பிச்சையெடுக்கும் ஒரு பெண் வழக்கமாக இந்தக் கோவில் வளாகத்தில் இரவில் தூங்குவாராம்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தப் பெண் இறந்துகிடந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் ராஜமன்னார், காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் உள்ளன. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →