கரூரில் நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் கோபிநாத்(30). இவர் இனாம்கரூர் திமுக இளைஞரணி துணை செயலாளராக இருந்தார். இவரது அத்தை மகன் பிரவீன்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டாக்டர் தம்பதிகளின் மகன் உள்பட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் கோபிநாத்(30). இவர் இனாம்கரூர் திமுக இளைஞரணி துணை செயலாளராக இருந்தார். இவரது அத்தை மகன் பிரவீன். இவருக்கும் கரூர் டவுன் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர்கள் பொன்னையன்-கவுசல்யா தம்பதியினரின் மகன் குருபிரசாத்(35) ஆகியோருக்கும் இடையே கடந்த மாதம் திருவள்ளுவர் மைதானத்தில் கூடைப்பந்து விளையாடச் சென்ற போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கரூர் மக்கள்பாதை லைட்ஹவுஸ் கார்னர் அருகே பிரவீன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் பிரவீனிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் ஏற்காடு இடைத்தேர்தலுக்குச் சென்றிருந்த கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை திருக்காம்புலியூர் வந்துள்ளார். அப்போது அவரிடம் பிரவீன் சென்று, அடிக்கடி குருபிரசாத் தன்னிடம் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவு 2 மணியளவில் மக்கள்பாதையில் குருபிரசாத் தனது நண்பர்களுடன் நிற்பதாக கோபிநாத்துக்கு தகவல் கிடைத்தது. இ
Advertisement
இதனை தொடர்ந்து அவர் அங்குச்சென்று, தனது அத்தை மகனிடம் ஏன் அடிக்கடி தகராறு செய்கிறாய் என குருபிரசாத்திடம் கோபிநாத் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குருபிரசாத், அவனது நண்பர்கள் நீலிமேட்டை சேர்ந்த சந்தோஷ்குமார், வஉசி தெருவைச் சேர்ந்த காளி ஆகியோர் அரிவாளால் கோபிநாத்தை வெட்டினர். இதில் சம்பவ இடத்திலே கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் நகர காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து குருபிரசாத் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.