முகப்பு
தற்போதைய செய்திகள்

மண்டேலா மறைவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி!

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே தென்னாப்பிரிகா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே தென்னாப்பிரிகா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், பேட்டை ரத்தினவேல், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கீரை அருள், கீரை வேலு, வெற்றிவேந்தன், ஜெகன், இளம்வழுதி, தாய்மண் சிற்றரசு, பெரு.சரித்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.