முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்!

நடராஜர் கோயிலை அரசே தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் உறுதியாக வாதிட வற்புறுத்தியும் சிதம்பரம் காந்திசிலை அருகே நகர மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

நடராஜர் கோயிலை அரசே தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் உறுதியாக வாதிட வற்புறுத்தியும் சிதம்பரம் காந்திசிலை அருகே நகர மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் வ.க.செல்லப்பன், இந்திய கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சி.வெங்கடேசன், அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.