காட்டுமன்னார்கோயில் அருகே மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் விழுந்து சாவு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சிறுகாட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிமணி (38). மீன்பிடித் தொழிலாளியான இவர் தி்ங்கள்கிழமை அருகே உள்ள வடவாற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு
காட்டுமன்னார்கோயில் அருகே மீன் பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சிறுகாட்டூரைச் சேர்ந்த கொளஞ்சிமணி (38). மீன்பிடித் தொழிலாளியான இவர் தி்ங்கள்கிழமை அருகே உள்ள வடவாற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஆற்றில் மூழ்கி இறந்த கொளஞ்சிமணியில் உடல் ஷண்டன் அருகே செவ்வாய்க்கிழமை ஆற்றில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.