செல் போன் பேட்டரி வெடித்து இளைஞர் படுகாயம்
சிவகங்கை மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (22). இவர் மதகுபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். புதன்கிழமை மதுரை முக்கு பகுதியில் உள்ள டிவி
செல் போன் பேட்டரி வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்ததாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (22). இவர் மதகுபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். புதன்கிழமை மதுரை முக்கு பகுதியில் உள்ள டிவி பழுதுபார்க்கும் கடையில் இவர் அமர்ந்திருந்த போது இவரது செல் போன் பேட்டரி வெடித்ததாம். இதில் படுகாயம் அடைந்த விக்னேஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.