முகப்பு
தற்போதைய செய்திகள்

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், சமய நல்லிணக்கப் பேரவை சார்பில், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

தற்போதைய செய்திகள்

சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், சமய நல்லிணக்கப் பேரவை சார்பில், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:51 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், சமய நல்லிணக்கப் பேரவை சார்பில், சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விழா திரு இருதய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி தாளாளர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். பேரவையின் தலைவர் அருட்பணியாளர் எஸ்.சேவியர்ராஜ் அடிகளார் வரவேற்றார்.சி.எஸ்.ஐ. தோமா தேவாலயத்தின் சபைகுரு அருள்திரு கே.முத்துச்செல்வன், கிறிஸ்துமஸ்-புத்தாண்டு தேவ செய்தியளித்து ஆசியுரை வழங்கினார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், ஹாஜி ஏ.ஜெய்னுலாபுதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எஸ்.சார்லஸ் மனோகரன், சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.புனிதன், தலைமை ஆசிரியர் ஐ.பரலோகம், கே.என்.எச். விடுதி தாளாளர் ஜே.ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரகாசம் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →