ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் சார்பு ஆய்வாளர் ராஜா, மங்காபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் சார்பு ஆய்வாளர் ராஜா, மங்காபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டியை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 1.150 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் சார்பு ஆய்வாளர் ராஜா, மங்காபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது பள்ளி வளாகத்தினுள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த மாயத்தேவர் மனைவி முத்தம்மாள் (75) என்பவரை பிடித்து விசாரித்தார். அவரிடம் இருந்த 1.150 கி.கி. கஞ்சா பறிமுதல் செய்தப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாளை கைது செய்தனர்.