முன்னாள் அமைச்சர் மீது புகார் : ரகசிய வாக்குமூலம் அளித்த மருத்துவர்
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது புகார் அளித்த மருத்துவர் ராணி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மீது புகார் அளித்த மருத்துவர் ராணி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
தற்போதைய திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ பரஞ்சோதி மீது, அரசு மருத்துவமனை மருத்துவர் ராணி என்பவர் புகார் அளித்தார். அதில், பரஞ்சோதி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளித்தார் ராணி. இந்த நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்த ராணி மற்றும் குடும்பத்தினர், இன்றும் நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.