ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டு (எண்ணெய்காப்பு) உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடையும்.இதனையொட்டி, ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கில் மாட வீதி, பெரிய பெருமாள் மேல மாடவீதி, கந்தாடை வீதி வழியாக எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படிகளைந்து திருவடி விளக்கம் நடைபெற்றது. பின்னர் மண்டபங்கள் கண்டருளி நாடகசாலை ஸ்ரீநிவாசன் சன்னதி விடாயாற்றியாகி எண்ணெய்காப்பு மண்டபம் சேருதல் நடைபெற்றது.
அங்கு தங்கவட்டவணையில் எழுந்திருளித் திருத்திரை வாங்கி திருவாராதனம் பட்டர்பிரான் சுருள்கோஷ்டி நடைபெற்றது. எண்ணெய் காப்பு சேவையும் ஷோடச உபசாரமும் நடைபெற்றது. மாலை ஸ்ரீஆண்டாள் பக்தி உலாவதல் நடைபெற்று, நீராட்டத் தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தக் கோஷ்டிக்குப் பின்னர் மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் புறப்பாடாகி பக்தி உலாவுதல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மானை விளையாடுதல் படியேற்ற சேவை நடைபெற்றது. இரவு ஸ்ரீஆண்டாள் துளசி வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.