பென்னி குயிக் மணிமண்டபம்: இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்த
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:33 PM
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதில் முக்கியப் பங்கு வகித்த பொறியாளர் பென்னி குயிக் நினைவு மணி மண்டபத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் இந்த மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று பகல் 12.30 மணி அளவில் இதனைத் திறந்து வைத்து, தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகளை வழங்குகிறார் ஜெயலலிதா. விருது பெறுபவர்களின் பெயர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அரசால் அறிவிக்கப்பட்டது.