பண்ருட்டியில் போராட்டத்தை தீவிரப்படுத்த கிராமத்தினர் முடிவு
பண்ருட்டியில் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பண்ருட்டியில் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பண்ருட்டியில் மேல் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இன்று முற்பகல் 11 மணி முதல் ஒன்றரை மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, பொதுமக்களிடம் எந்த அதிகாரியும் பேச முன்வரவில்லை.
இதனால், சாலை மறியலைக் கைவிட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்தனர்.
சாலை மறியல் காரணமாக கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.